அய்யாவாடியில் நிகும்பலா யாகம் திரளான பக்தர்கள் தரிசனம்.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2018 12:05
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிராதேவி கோயில் உள்ளது. எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இந்த கோயிலில் ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை வழிபட்டு வேண் டிய வரங்களை பெற்றது ஐதீகம். இங்கு அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகு ம்பலா யாகம் சிறப்பானது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை சரனடைந்து, வழிபட்டால் சகல ஐஷ்வர்யங்களும் கிடைக்கும். வைகாசி மாத அமாவாசை யான நேற்று(மே15)ல் கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் நடத்த ப்பட்டன. மதியம் 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் பழங்கள், ஹோ ம பொருட்கள், இறுதியாக மிளகாய் வற்றலை சேர்த்து நிகும் பலா யாகத்தை நடத்திவைத்தார். தொடர்ந்து ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்ற து. இதில் திருவாவடுதுறை ஆதினம் கட்டளை ஸ்ரீமத் சுவாமி நாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை பிரார்த் தனைசெய்தனர். யாகத்திற்கா ன ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோண த்தில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.