Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி லட்டு பிரசாத ... மகரவிளக்கு 15-ம் தேதி வந்தது ஏன்?: தேவசம்போர்டு தலைவர் விளக்கம்! மகரவிளக்கு 15-ம் தேதி வந்தது ஏன்?: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறில் பஞ்ச ரத்ன கீர்த்தனை இசை மழை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஜன
2012
11:01

தஞ்சாவூர்:திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில், ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள், ஒரே இடத்தில் கூடி, பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து, தியாகராஜருக்கு நேற்று, இசையஞ்சலி செலுத்தினர்.சத்குரு தியாகராஜரின், 165வது ஆராதனை விழா, திருவையாறில் கடந்த 9ம் தேதி துவங்கியது. விழாவை, திருப்பதி தேவஸ்தான தலைவர் கனிமூரி பாபிராஜு எம்.பி., துவங்கி வைத்தார். தொடர்ந்து, இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்தன.தியாகராஜர் முக்தி அடைந்த தினமான நேற்று காலை, திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில், சிறப்பு பூஜை நடந்தது. காலை 7:30 மணிக்கு, அங்கிருந்து தியாகராஜர் சிலையுடன் உஞ்சவிருத்தி ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக, விழாப் பந்தலை அடைந்தது. காலை 9:00 மணிக்கு, தியாகராஜர் சமாதியில் உள்ள அவருடைய சிலைக்கு, திரவியப் பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், பால் அபிஷேகம் கோலாகலமாக நடந்தது.தொடர்ந்து சுதா ரகுநாதன், புளூட் ரமணி, கத்ரி கோபால்நாத், மகதி, சுமோ சுசீந்திரா, மெகபூப் சுபானி, உமையாள்புரம் சிவராமன், சரண் உட்பட, ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து, தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். தியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ரெங்கசாமி மூப்பனார், செயலர்கள் அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ் மற்றும் உறுப்பினர்கள், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஆராதனையை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதால், இசைப் பிரியர்கள், திருவையாறில் அதிகளவில் முகாமிட்டிருந்தனர். இரவு, 9:00 மணிக்கு முத்துப் பல்லக்கில், தியாகராஜர் ஊர்வலம் நடக்கிறது. 10.30 மணி முதல், 11 மணி வரை, பிரபல பாடகர் ஜேசுதாஸ் பாட்டுக் கச்சேரி நடக்கிறது. பின்னர் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரியில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் மூன்று நாள் உபன்யாசம் இன்று (14ம் தேதி) மாலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar