பதிவு செய்த நாள்
16
மே
2018
03:05
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், நேற்று,(மே15)ல் அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான
வீரராகவர் கோவிலில், நேற்று, (மே15)ல் அமாவாசை தரிசனத்திற்காக, விடியற்காலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மீண்டும், பிற்பகல், 1:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெற்றது. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.
நேற்று (மே 15)ல் பிற்பகல், 3:30 மணிக்கு, உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை, 6:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவர் மாடவீதிகளில் வலம் வந்தார். ஏராள மானோர் பெருமாளை வணங்கினர்.
திருவள்ளூர், பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில், நேற்று, (மே15)ல் சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகமும், திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.