திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு நேற்று (மே 15)ல் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, மாதம்தோறும் கிருத்திகை விழா கொண்டாடப்படுவது வழக்கம். அது போல நேற்று (மே 15)ல், வைகாசி மாத கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில், கந்தசுவாமி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. பின், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன.விழாவையொட்டி, நேற்று (மே 15)ல் இரவு மாடவீதி களில் சுவாமியின் திருவீதியுலாவும் நடைபெற்றது.