Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ... குளித்தலை மாரியம்மனுக்கு சந்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் சிலை முறைகேடு: மாஜி கமிஷனரை பிடிக்க தனிப்படை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2018
01:05

திருச்சி: பழநி முருகன் கோவிலுக்கு உற்சவர் சிலை செய்ததில், 4.2 கிலோ தங்கம் மோசடி செய்த வழக்கில் சிக்கி, தலைமறைவாகியுள்ள, ஓய்வு பெற்ற, ஹிந்து சமய அறநிலைத்துறை கமிஷனரை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பழநி முருகன் கோவிலுக்கு, தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனராக இருந்தவர், தனபால். இவரதுபணிக்காலத்தில், உற்சவர் சிலை புதிதாக செய்யப்பட்டது.

இந்த சிலைக்கு பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.அதன்படி, அவர்கள் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், 4.200 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, ஸ்தபதி முத்தையா உட்பட நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், முறைகேடு நடந்த காலகட்டத்தில், ஹிந்து சமய அறநிலைத்துறை கமிஷனராக இருந்த தனபாலை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணைக்கு வரும்படி, சம்மன் அனுப்பினர். இருமுறை சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு வரவில்லை. இதனால், தனபாலை கைது செய்ய, ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில், தனிப்படை அமைத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து தனபால் வீடு உள்ள, பட்டுக்கோட்டை மூத்தாக்குறிச்சி கிராமத்துக்கு போலீசார் சென்றபோது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. போலீசாரால் கைது செய்யப்படுவோம் என்பதை தெரிந்து கொண்ட தனபால், நேற்று முன் தினம் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் அரசின் உயர் பொறுப்பில் இருந்த ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உட்பட, ஹிந்து சமய அறிநிலைத்துறை அதிகாரிகள் பலரும் சிக்குகின்றனர் என, போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar