பதிவு செய்த நாள்
17
மே
2018
01:05
சென்னை: தமிழக அறநிலையத் துறை ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமையகத்தில், நேற்று நடந்தது. இதில், அமைச்சர் ராமச்சந்திரன், கூறியதாவது: கோவிலுக்கு சொந்தமான இடங்களில் நடக்கும், திருமண மண்டபம் உள்ளிட்ட, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, திறப்பு விழா நடத்த வேண்டும். அனைத்து கோவில்களிலும், தீ தடுப்பு நடவடிக்கைகள், முழுமையாக செய்யப்பட வேண்டும். கோவில் சொத்துகள், நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வரும் மழைக் காலத்திற்கு முன், எல்லா கோவில் குளங்களும் முழுமையாக துார் வாரப்பட்டு, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.