புல்லரம்பாக்கம் : புல்லரம்பாக்கம் வள்ளி தெய்வானை சமேத குமாரசுவாமி கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு, உற்சவர், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில், வள்ளி தெய்வானை சமேத குமாரசுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், கிருத்திகை திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. அன்றிரவு, உற்சவர் குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக புல்லரம்பாக்கம் கிராமத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, உற்சவரை வழிபட்டனர்.