பதிவு செய்த நாள்
18
மே
2018
12:05
காஞ்சிபுரம் : நமது நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் இணையதளத்தில், வைகாசி பிரம்மோற்சவம் குறித்து, ’அப்டேட்’ செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், மே, 27ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவையொட்டி, கோவில் சார்பில், பிரம்மோற்சவ பத்திரிகை அச்சிடப்பட்டு, உபயதாரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், http://www.kanchivaradarajartemple.com/ என்ற கோவில் இணையதளத்தில், 2018ம் ஆண்டுக்கான உற்சவ பத்திரிகை ’அப்பேட்’ செய்யாமல், 2017ம் ஆண்டு பத்திரிகையே உள்ளது என, நேற்று முன்தினம், நமது நாளிதழில், புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், இணைய தளத்தில், 2018ம் ஆண்டுக்கான பிரம்மோற்ச பத்திரிகை, ’அப்டேட்’ செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வெளியூர் பக்தர்கள் உற்சவம் குறித்த விவரங்களை எளிதில் தெரிந்து கொள முடியும்.