குளித்தலை: செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவை நடத்த, எட்டு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்சாயத்து, மேட்டுமருதூரில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான, 50க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் தென்னந் தோப்பு மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. இக்கோவிலில், எட்டு கிராம பொது மக்கள் திருவிழா கொண்டாடி வந்தனர். கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக, கோவில் திருவிழா நடக்கவில்லை. எனவே, இந்துசமய அறநிலையத்துறை மூலம் திருவிழா நடத்தவேண்டும்.