வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2018 11:05
பரமக்குடி பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு அனுக்ஞை, காப்புக்கட்டுதல் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டது. இரவு பெருமாள் அன்னவாகனத்தில் வீதியுலா வந்தார். மே 24 காலை 9:30 மணி முதல் 11:00 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாளுக்கு திருக்கல்யாணமும், இரவு பூப்பல்லக்கில் வீதியுலா நடக்கும். மறுநாள் திருமங்கையாழ்வார் வேடப்பரியாகம், மே 26 மாலை 5:00 மணிக்கு தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.