ரமலான் மாதத்தில் தொழுகையின் அளவு எந்தளவுக்கு அதிகமாகிறதோ, அந்தளவுக்கு அதிக பலனை அல்லாஹ் அருள்வான். “நீங்கள் அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தா செய்யுங்கள் (தொழுங்கள்). நிச்சயமாக நீங்கள் செய்யும் ஒரு ஸஜ்தாவைக் கொண்டும், உங்களுக்கு ஒரு பதவியை அல்லாஹ் உயர்த்து கிறான். உங்களை விட்டும் ஒரு பாவத்தை அழித்து விடுகிறான்,” என்கிறார் நபிகள்நாயகம். மனிதன் தொழுதபிறகு, அவனுக்காக தொழுகையின் பத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப் படுகிறது. சிலருக்கு ஒன்பதில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு ஏழில் ஒரு பங்கு...இப்படியாக தொழுகையில் பல லட்சத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப்படுமானாலும், அதுவும் அல்லாஹ்வின் கிருபையே ஆகும். கியாமநாளில் முதலாவதாகக் கேட்கப்படும் கேள்வி தொழுகையைப் பற்றியதாகும். எனவே தொழுகையில் கவனம் பேணுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:39 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:17 மணி.