பதிவு செய்த நாள்
19
மே
2018
12:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: மானிட அவதாரம் எடுத்து, இறைவனையே மணவாளனாக மனதில் கொண்டு, அரங்கனை கரம் பற்றியவள் ஆண்டாள். 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்றானது மான ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவள் ஆண்டாள். 12 ஆழ்வார்களில் பெண் ஆழ்வாராக பெருமை சேர்த்தவள் ஆண்டாள். இத்தகைய சக்திமிக்க ஆண்டாளை, அவள் திருவடிகளில் சரணாகதியாக வணங்கி வேண்டினாள் நாம் நினைத்து எல்லாம் நிறைவேறும். அத்தகைய சக்திமிக்க ஆண்டாளுக்கு பெருமை சேர்ப்பது, அவள் தினமும் சூடிக்களையும் மாலை. இம்மாலையை அணிந்து தான் மதுரை கள்ளழகரும், ஸ்ரீரெங்கத்து பெருமாளும், புரட்டாசி பிரம்மோற்ஸவ விழாவில் திருப்பதி பெருமாளும் அணிகின்றனர்.
ஆண்டாள் சூடிகளையும் மாலைக்காக காத்திருக்கும் பெருமாள்கள், அதை யணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது மிகவும் திவ்யமானது. இத்தகைய பெருமைமிக்க ஆண்டாள் மாலை, நமக்கு மிகுந்த ஐஸ்வர்யததை தரும். திருமணமாகாத பெண்கள் வேண்டுதல் நிறைவேறும்போது, கிளியையும், மாலையையும் அணிந்து வாழ்த்து பெறுவது மிகவும் பெருமை வாய்ந்தது. “மதுரை அழகர்கோவிலிலிருந்து வைகையாற்றில் இறங்க வரும் கள்ளழகர், ஆண்டாள் மாலையணிந்து ஆற்றில் இறங்கிய பிறகு, மீண்டும் கோயிலுக்கு திரும்பும் போது, காணிக்கை உண்டியல்கள் நிறைந்து வழியும். அத்தகைய அளவிற்கு ஐஸ்வர்யம் தரவல்லது ஆண்டாள் மாலை, ” என்கிறார் வேதபிரான் அனந்தபிரான் பட்டர்.