பதிவு செய்த நாள்
19
மே
2018
01:05
மோகனூர்: புனித செபஸ்தியார் ஆலய தேர்த்திருவிழா, நாளை துவங்குகிறது. மோகனூர் புதுத்தெருவில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தேர்த்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, நாளை துவங்குகிறது. மாலை, 6:30 மணிக்கு, குடும்ப நல குழு இயக்குனர் மரிய ஜோசப் தலைமையில், கொடியேற்றம் நடக்கிறது. மறுநாள் மாலை, 6:30 மணிக்கு, பங்குத் தந்தை பிரகாஷா தலைமையில், வணக்க நாள்; 22 காலை, 9:00 மணிக்கு, சேலம் மறைமாவட்ட பொருளாளர் எட்வர்ட் ராஜன் தலைமையில், திருவிழா திருப்பலி நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு, பொது விருந்து, மாலை, 5:00 மணிக்கு, பொங்கல் மந்திரிப்பு, மாலை, 6:30 மணிக்கு, ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. மின் அலங்காரத் தேரில் எழுந்தருளும் புனிதர், வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். வழிநெடுகிலும், பக்தர்கள், மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து, புனிதரை வணங்குகின்றனர்.