பதிவு செய்த நாள்
21
மே
2018
12:05
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்தில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது.
சாமிசெட்டிபாளையத்தில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, ராமலிங்கேஸ்வரர், மகா கணபதி, கன்னிமூல கணபதி, பாலமுருகன், சப்த கன்னிமார், தேவல மகரிஷி, நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் தயானந்தபுரி சுவாமிக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலை மகா கும்பாபிேஷக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானம் நடந்தது. இன்று காலை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விழா நடக்கிறது.