பதிவு செய்த நாள்
21
மே
2018
12:05
நாமக்கல்: வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1,008 லிட்டர் பாலில் சிறப்பு அபி?ஷகம் நடந்தது. நாமக்கல், ஆஞ்சநேயர் ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபி ?ஷகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதேபோல், நேற்று வைகாசி முதல் ஞாயிறை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. 10:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய் தூள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபி?ஷகம் நடந்தது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.