பதிவு செய்த நாள்
21
மே
2018
02:05
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அருகே, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழா இரு வாரங்களுக்கு முன், பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த, 18ல், காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். நேற்று தேரோட்டம் நடந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தேரில் வைத்து பூஜை நடந்தது. பின், கோவிலைச் சுற்றி அம்மன் திருத்தேர் மூன்று முறை வலம் வந்தது. லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, கருப்பத்தூர், பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி பகுதிகளில் இருந்து, ஏரளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.