மேலுார்;மேலுார் தும்பைபட்டி சிவாலயாபுரம் சங்கரலிங்கம், சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர, அஷ்டலட்சுமி, நவக்கிரக, அதிவேத பூஜை நடந்தது.அக்னி பரிகார பூஜைகளுடன் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. குருக்கள் தண்டபாணி, ரமஷே் பூஜைகளை செய்தனர். டாக்டர்கள் வேல்குமார், மோகன் மற்றும் உபயதாரர்கள் வேல்முருகன், லதா, பால்பாண்டி பங்கேற்றனர். விழா குழு தலைவர் சங்கரன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.