Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மாட்டுப்பொங்கலன்று வீட்டுக்கு வீடு ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இந்த ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
10:01

நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இந்த ஆண்டு, இரண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.திருமலை கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, இரண்டு பிரம்மோற்சவம் முதலில் நடத்தப்படும். பின்னர் நவராத்திரி பிரம்மோற்சவம் என்ற பெயரில் மற்றொரு பிரம்மோற்சவமும் நடத்தப்பட்டு வருகிறது. புராண கால வரலாற்றின்படி அதிக மாதம் வரும் ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி கடந்த 2010ம் ஆண்டில், ஆண்டு பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவம் என இரண்டு முறை திருமலை கோவிலில் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டது.கடந்த 2011ம் ஆண்டு வழக்கப்படி ஒருமுறை ஆண்டு பிரம்மோற்சவம் நடத்தப்பட்டது. இதன்படி கணக்கிட்டால் அடுத்த 2013ம் ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், இந்த 2012ம் ஆண்டில் இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுவதற்கான காரணம் குறித்து திருமலை கோவிலின் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர், இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுவதற்கான காரணம் குறித்து எழுந்துள்ள கேள்விக்கு பதிலளித்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிக மாதம் வரும்போது, திருமலை கோவிலின் ஐதீக முறைப்படி அந்த ஆண்டில் இரண்டு முறை பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அதிக மாதம் என்பது ஒரு ஆண்டு முன்பாகவே வந்துள்ளதால், அடுத்த 2013ம் ஆண்டில் நடைபெற வேண்டிய இரண்டு பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டில் நடைபெற உள்ளது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.இதன்படி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடத்தப்படுவதற்கான தேதியையும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 18 முதல் 26ம் தேதி வரையில் ஆண்டு பிரம்மோற்சவமும், அக்டோபர் 15ம் தேதி முதல் 23 வரையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar