பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே தாளியூரில் உள்ள பொம்மியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழாநடந்தது.பன்னீர்மடை ஊராட்சிக்குட்பட்ட தாளியூரில், பொம்மியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிளக்கு வழிபாடு, முளைப்பாரி இடுதல், கோபுரவிமானம் கலசம் நிறுவுதல், திருவிளக்கு மற்றும் புனிதநீர் வழிபாடு நிகழ்ச்சியுடன், கும்பாபிேஷக விழா துவங்கியது. நிகழ்ச்சியில், பேரூராதீனம் மருதாசல அடிகள் கும்பாபிேஷக விழாவை நடத்தி வைத்தார். விழாவை தொடர்ந்து அலங்கார பூஜை, அபிேஷக பூஜை, தீபாராதனை, அன்னதானம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.