பதிவு செய்த நாள்
22
மே
2018
01:05
கோத்தகிரி: கோத்தகிரி காத்துகுளி தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிேஷகம் நடந்தது. கோத்தகிரி காத்துகுளி தண்டாயுதபாணி கோவிலில் நடந்துவந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மாக கும்பாபிேஷகம் நடந்தது.இவ்விழாவை ஒட்டி, 18ம் தேதி, 12:30 மணிக்கு, பஞ்சகாவிய பூஜை, மகா கணபதி ேஹாமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து, 15ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, ரக்ஷா பந்தனம், அங்குரார்ப்பணம் மற்றும் கும்பாஸ்தனம், முதல் கால பூர்ணாகுதி பூஜைநடந்தது. தொடர்ந்து, இரண்டாம் கால வேதாபாராயணம் நடந்தது. இதில், முருகபெருமான் மூலமந்திரம் நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம் அதிகாலை, 4:00மணிக்கு மேல், மூன்றாம் கால வேள்வி வழிபாடுடன், மூலமந்திரம் நாடி சந்தானம் மகா பூர்ணாகுதி கடம் புறம்பாடு நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மேல், கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் முன்னிலையில், ஐய்யனுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.விழாவில், காத்துகுளி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் விழா குழுவினர், கோவில் கமிட்டியினர் மற்றும் காத்துகுளி கிராம மக்கள் செய்திருந்தனர்.