அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேணுகோபால சுவாமி கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.