Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கணபதி சுவாமிக்கு குருபூஜை ரமலான் சிந்தனைகள்-7: தொழுகையில் ஏழு வசனம் ரமலான் சிந்தனைகள்-7: தொழுகையில் ஏழு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் கோவில்களில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் கோவில்களில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

23 மே
2018
12:05

திருப்பூர்: விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி, நகரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது.


நேற்று (மே22)ல் இரு கோவில்களிலும் திருவிழா கொடியேற்றம் நடந்தது. வீரராகவ பெருமாள் கோவிலில், சிறப்பு யாக பூஜை, அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டது. விஸ்வேஸ்வரசுவாமி கோவில், சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜை, அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களின் ‘ஓம் நமசிவாயா’ கோஷம், மேள வாத்தியம் முழங்க, கொடியேற்றம் நடந்தது. அதன்பின், பூமி நீளா தேவி தாயார், கனகவல்லி தாயார் சமேத வீரராகவப்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அதேபோல், சோமாஸ்கந்தர் ரூபத்தில் எம்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, தேர் வீதிகளில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


இன்று முதல் தினமும் காலை, மாலை நேரங்களில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதி உலா நடக்கிறது. வரும் 26ம் தேதி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் எம்பெருமான் கருட சேவை புறப்பாடு நடக்கிறது. 27ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளை யானை வாகனத்தில் திருவீதியுலா, அம்மன் பல்லக்கு சேவை மற்றும் அனுமன் வாகன திருவீதி உலா நடக்கிறது. வரும், 28ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி, மதியம், 3:00க்கு, ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல், 29ம் தேதி, மதியம், பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது. 30ம் தேதி, பரிவேட்டை, 31ம் தேதி, தெப்பத்திருவிழா, ஜூன், 1ம் தேதி, மகா தரிசனம், 2ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா, மலர் பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar