பதிவு செய்த நாள்
24
மே
2018
12:05
கோத்தகிரி : கோத்தகிரி கிருஷ்ணாபுதுார் பட்டத்துளசியம்மன் கோவில், 28வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, இரவு மதுரைவீரன் மற்றும் முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோத்தகிரி - குன்னுார் சாலையில் உள்ள பட்டத்துளசியம்மன் கோவிலில், 28வது ஆண்டு திருவிழா, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மலர் அலங்கார அபிேஷக சிறப்பு பூஜை நடந்து வருகிறது. பல்வேறு உபயதாரர்கள் மூலம் நடைபெறும் சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்விழாவின் ஒருகட்டமாக, 20ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, சக்திவேல் எடுத்து, கன்னி மாரியம்மன் கோவில் முதல், அம்மனின் உள்ளூர் திருவீதி உலா நடந்தது. பகல், 1:00 மணிக்கு உச்சிபூஜை நடந்தது. நேற்று காலை, 7:30 மணிமுதல், 9:00 மணிவரை அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு மதுரைவீரன் பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு, 10:00 மணிமுதல், 12:00 மணிவரை முனீஸ்வரர் பூஜை நடந்தது. விழாவில், கிருஷ்ணாபுதுார் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.