உத்தரகோசமங்கை கோயிலில் பிரகார மண்டபம் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2018 10:05
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் பாண்டிய மன்னர், சேதுபதி மன்னர்களால் திருப்பணி நடந்தேறியுள்ளது. மங்களநாதர் சுவாமி கருவறையை சுற்றியுள்ள தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளை உள்ளடக்கிய முதல் பிரகார மண்டபம் திறந்த வெளியில் இருந்து வருகிறது. 13வது மாநில நிதிக்குழு மூலம் ரூ.75 லட்சத்தில் சீதளி மண்டபத்திற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. கருவறையை ஒட்டியுள்ள சீதளி மண்டபத்திற்கான பணி கடந்த 2011ல் ஆரம்பிக்கப்பட்டு 2015ல் நிறைவு பெற்றது. முதல் பிரகாரத்திற்கு தேவையான கருங்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய துாண்கள், மேற்கூரை கற்கள், சித்திர மண்டப கால், பால் கல், தரைக்கல், சுருக்கி, தட்டோடு பணி முடிக்க ரூ.2 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முதல் பிரகார மண்டப பணி வருகிற 2019ல் நிறைவடைய உள்ளது. முதல்கட்டமாக கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் வசந்தகுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் ஸ்தபதி குமரேசன் மூலம் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.