பதிவு செய்த நாள்
25
மே
2018
10:05
திருத்தணி:தணிகாசலம்மன் கோவிலில், அடுத்த மாதம், 3ம் தேதி, சண்டி ஹோமம் நடைபெறுகிறது. இதற்காக, நேற்று, கோவில் வளாகத்தில் பந்தக்கால் பூஜை நடந்தது. திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்து, ஐந்தாம் ஆணடையொட்டி, அடுத்த மாதம், 3ம் தேதி, மஹா சண்டி ஹோமம் நடைபெறுகிறது. இதற்காக, நேற்று காலை, கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில், திரளான பெண்கள் பங்கேற்று, கொம்புகளை நட்டு விழாவை துவக்கி வைத்தனர். அடுத்த மாதம், 2ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, விநாயகர் பூஜை, மஹா சங்கல்பம், கோ பூஜை, கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. மாலை, 6:00 மணிக்கு, கலச அலங்காரம், நவாவரண பூஜை, சண்டி பாராயணம் நடக்கிறது. மறுநாள், 3ம் தேதி காலை, 7:30 மணிக்கு மகா சண்டிஹோமம் மற்றும் மூலவருக்கு பூர்ணாஹூதியும், மதியம், 12:00 மணிக்கு அம்மனுக்கு, 108 சங்காபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.