மேலுார்:மேலுார் அருகே திருவாதவூர் திருமறைநாதர் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.தேரில் திருமறைநாதர், வேதநாயகிஅம்பாளுடன் எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனை நடந்தது. கிளாதிரி, திருவாதவூர்மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் தேர் வடம் பிடித்துஇழுத்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.