சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2018 04:05
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில் பூரண,புஸ்கலை தேவியுன் சேவுகப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை தேவஸ்தான ஆளுகைக்குட்பட்ட சேவுகப்பெருமாள் கோயிலின் வைகாசி விசாகத்திருவிழா மே 20ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வெள்ளி வாகனங்களில் வீதி உலா வருகிறார். விழாவில் இன்று(மே 28ல்) தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில் பூரண,புஸ்கலை தேவியுன் சேவுகப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் கடைசி நாளான மே 29ல் பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.