செஞ்சி;செஞ்சி சிங்கவரம் ரங்கநாதருக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவைஉற்சவம் நடத்தினர்.செஞ்சி தாலுகா வாணிய வைசியர் சங்கத்தினர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிங்கவரம் ரங்கநாதருக்கு கருட சேவை உற்சவம்நடத்தினர். இதை முன்னிட்டு தாயாரம்மாள், பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். மாலை 6 மணிக்கு ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினர். சிங்கவரம் கிராமம் மற்றும் செஞ்சி கடை வீதி வழியாக சாமி வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை செஞ்சி தாலுகா வாணியர் வைசியர்சங்கத்தினர் செய்திருந்தனர். ஊர்வலத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பாகவத கோஷ்டியினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.