சந்திரப்ரபை வாகனத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருவீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2018 11:05
கோவை: பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்ஸவ நடந்தது. பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம், பத்துநாள் பிரம்ேஹாத்ஸவ உற்சவத்தி திருவிழா நடைபெறும். இந்தாண்டு, பிரம்மோத்ஸவ உற்சவம், கடந்த 26ம் தேதி துவங்கியது. தினமும் காலை, திருமஞ்சனம் மற்றும் வேதபாராயணம் பாடப்படுகிறது. பத்து நாள் உற்சவத்தில், நாள்தோறும் ஒரு வாகனத்தில் பெருமாள் திருவீதியுலா வருவார். நேற்று, சந்திரப்ரபை வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று, பெருமாளுக்கு உகந்த, கருடசேவை வாகனத்தில் திருவீதியுலா வரவுள்ளார். வரும் ஜூன் 6ம் தேதியுடன் பிரம்ேஹாத்ஸவ உற்சவம் நிறைவு பெறுகிறது.