அவலுார்பேட்டை: கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, கெங்கபுரம் கிராமத்திலுள்ள பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 26 ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும், இரவில் அம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. மாடவீதி வழியாக பொதுமக்கள் ஊர்வலமாக தேரை இழுத்து வந்தனர். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.