Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாம்பாலம்மன் கோவில் திருவிழாவில் ... சிறுகடம்பூர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னட தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2018
01:06

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, கன்னட தூண் கல்வெட்டை, வரலாற்றுத்துறை ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, ஐகொத்தப்பள்ளி கிராமத்தில், செல்லியம்மன் கோவில் அருகே, விவசாய நிலத்தில், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, கன்னட தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: நுளம்பர் என்னும், அரசு மரபினர் கி.பி., 8ம் நூற்றாண்டு முதல், 11ம் நூற்றாண்டு வரை, கர்நாடகம், ஆந்திரா மற்றும் தமிழகத்தில், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். அதில், நுளம்ப மன்னன், முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில், எயில்நாடு என்ற பகுதியை, கங்கரங்கமா என்ற, மகேந்திரனின் ஆளுனரால், ஆட்சி செய்யப்பட்டுள்ளது. அப்போது, அந்துண்டா என்ற இடத்தில் அமைந்துள்ள, ராமதான என்ற கோவிலுக்கு, நிலத்தை தானம் செய்து, எல்லைகளைக் குறித்துள்ளனர். இக்கல்வெட்டில், தகடூரில் (இன்றைய தர்மபுரி) உள்ள, கடவுள் மகேசுவரர் பெயரும், குறிப்பிடப்பட்டுள்ளது. எயில்நாடு என்று குறிப்பிட்டுள்ள இடம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, கங்காவரம், காத்தாடிக்குப்பம் மற்றும் பெண்ணேஸ்வரமடம் ஆகிய பகுதிகளைக் கொண்ட, பண்டைய நாட்டு பிரிவாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar