பதிவு செய்த நாள்
18
ஜன
2012
11:01
உடன்குடி:வனத்திருப்பதி கோயிலில் தைத்திருநாளை முன்னிட்டு சுவாமி பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.தென்பகுதியில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான வனதிருப்பதி புன்னை ஸ்ரீ நிவாசபெருமாள், ஆதிநாராயணர், சிவனணைந்த பெருமாள் கோயிலில் தைத்திருநாளை முன்னிட்டு கடந்த ஜன.,15ம் தேதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை மூலவர் திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார சேவையும் நடந்தது. கடந்த 16ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கோபூஜையும், காலை விஷ்வரூப தரிசனமும், மூலமந்திர யாகமும், திருமஞ்சனமும், அலங்காரபூஜையும், மாலையில் சுவாமி ஸ்ரீநிவாச பெருமாள் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுவாமி புதிய குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெரு பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு வண்ண வாணவேடிக்கை நடந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஓட்டல் சரவணபவன் சார்பில் காலை முதல் இரவு வரை சர்க்கரை பொங்கல் வழங்கினர். ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் ராஜகோபால், ஓட்டல் சரவணபவன் முதன்மை நிர்வாகி கணபதி, கோயில் அதிகாரி வசந்தன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.