திண்டிவனம்: தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திண்டிவனம் அருகே உள்ள தீவனூரில் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி, மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 108 சங்காபிஷேகமும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.