இறைவனுக்கு அடி பணிவோம்"நீங்கள் இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும். அவன் விதித்துள்ள ஐங்காலத் தொழுகையையும், ரமலானின் நோன்பையும், ஏழை வரியான ஜக்காத்தையும் நிறைவேற்றி வாருங்கள். அதோடு, இறைவனின் இல்லமான கஃபாவையும் தரிசித்து ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அப்போது சுவனபதி (சொர்க்கம்) உங்களு டையதாகி விடும்,” என்கிறார் நபிகள் நாயகம்.இறைவனே எல்லாம். இறைவனின் கட்டளை களுக்கு நாம் பயந்து நடக்க வேண்டும்.
மனதில் பல மோசமான எண்ணங்களுக்கு ஷைத்தான் வித்திடுவான். அவனது பிடியில் அகப்பட்டு விட்டால், நம்மால் மீளவே முடியாது. குடிக்கக்கூடாது, பிறரைத் துன்புறுத்தக் கூடாது என்றெல்லாம் இறைவனின் கட்டளை இறங்கியிருக்கிறது.
ஷைத்தானோ, இதையெல்லாம் செய் எனத் தூண்டிக்கொண்டே இருப்பான். எனவே இறை வனை நினைத்தபடியே நோன்பிருங்கள்.
உங்களை இந்த பழக்கங்கள் அண்டாது. இன்று(ஜூன் 12) நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:45 மணி
நாளை (ஜூன் 13) நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி