பதிவு செய்த நாள்
12
ஜூன்
2018
11:06
ஊத்துக்கோட்டை: சாய்பாபா கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். எல்லாபுரம் ஒன்றியம், ராள்ளபாடி கிராமத்தில், பக்தர்கள் பங்களிப்புடன் சாய்பாபா கோவில் கட்டும் பணி நடந்து வந்தது. இதில், கணபதி, ஆஞ்சநேயர் சன்னதியும் கட்டப்பட்டது. கோவில் கட்டும் பணிகள் முடிந்து,
நேற்று (ஜூன் 11), மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி, மூன்று தினங்களாக, கணபதி பூஜை, நான்கு கால பூஜைகள், சிவாச்சாரியார் வழிபாடு, தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதல், புனித நீர் குடயாத்திரை அனுமதி பெறுதல், கலசங் களில், புனித நதிகளின் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கலசங்கள் மற்றும் முளைப்பாரிமுக்கிய வீதிகள் வழியாக வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று (ஜூன் 11), காலை, 10:00 மணிக்கு, கோவிலில் உள்ள கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப் பட்டது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.