குமரி வெங்கடாஜலபதி கோயில் திருப்பதி தலைமை அர்ச்சகர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2018 01:06
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமான பணிகளை திருப்பதி தலைமை அர்ச்சகர் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்துக்குள் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமான பணி 2013-ல் தொடங்கியது. திருப்பதி போன்று இங்கும் அனைத்து சன்னதிகளும், கொடிமரமும் அமைக்கப்படுகிறது. 75 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளது.இந்நிலையில் திருப்பதி தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி, ஆகம ஆலோசகர் சுந்தரவரதன் சுவாமிகள் ஆகியோர் நேற்று கோயிலை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:ஜூலை 11-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் 20 முதல் 25 சதவீத பணிகள் இன்னும் முடிவடைய வேண்டி உள்ளதால் உறுதியாக கூற இயலவில்லை. பணிகள் நிறைவு பெறாவிட்டால் வேறு முகூர்த்தம் குறிக்கப்படும். கோயில் நடுவில் வெங்கடாஜலபதி , தெற்கு பக்கம் பத்மாவதி, வடக்கில் ஆண்டாள், நேர் எதிரில் கருடாழ்வார் சன்னதிகள் அமைகிறது.வைகுண்ட ஏகாதசி நாளில் கோயிலின் வடக்கு வாசல் வழியாக சுவாமி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 40 அடிஉயர கொடிமரம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.