பதிவு செய்த நாள்
14
ஜூன்
2018
01:06
ஈரோடு: ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவிலில், தீ விபத்துகளை தடுக்கும் வகையில், அணையா விளக்கு நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவில் பணியாளர்கள் கூறியதாவது: தீ விபத்துகளை தவிர்க்க, கண்ணாடி கூண்டுக்குள், அணையா விளக்கு நிறுவப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில், எட்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆயில் டேங்க் உள்ளது. கீழே, மூன்று லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்கு உள்ளது. மேலிருந்து எண்ணைய் ஊற்றினால், பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள டேப் வழியாக, விளக்குக்கு வந்து விழும். நாள் முழுவதும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். பக்தர்கள், கோவில் வளாகத்தில் வேறு எங்கும் விளக்கு ஏற்றக்கூடாது என்பதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.