பதிவு செய்த நாள்
15
ஜூன்
2018
12:06
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில்களில், நிரந்தர உண்டியல் ஏழு, திருப்பணி உண்டியல் ஒன்று என, எட்டு உண்டியல்கள் உள்ளன. இவற்றை திறந்து எண்ணும் பணி நேற்று நடந்தது. நிரந்தர உண்டியலில், 13 லட்சத்து, 48 ஆயிரத்து, 502 ரூபாய், 35 கிராம் தங்கம், மூன்று கிலோ, 165 கிராம் வெள்ளி இருந்தது. திருப்பணி உண்டியலில், ஒரு லட்சத்து, 17 ஆயிரத்து, 932 ரூபாய் கிடைத்தது. பண்ணாரி கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், கோவில் செயல் அலுவலர் அருள்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், கொமரப்பா செங்குந்தர் பள்ளி மாணவர்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.