Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒடிசா, புரி ஜெகனாதர் கோயில் கருவறை ... திருவண்ணாமலை கிரிவலப்பாதை தார்ச்சாலை  சீரமைக்கும் பணி தீவிரம் திருவண்ணாமலை கிரிவலப்பாதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணத்தடை நீக்கும் சாலைக்காளியம்மன் கோயில்
எழுத்தின் அளவு:
திருமணத்தடை நீக்கும் சாலைக்காளியம்மன் கோயில்

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2018
11:06

போடி: போடியில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சாலைக் காளியம்மன் கோயில். பல நூற்றாண்டுகளுக்கு முன் சதம்பவன காடுகளாக இருந்த இப்பகுதியில் பளியர் இனத்தவர்கள் வசித்தனர். அதன் பின் தனியாரால் இக்கோயில் கட்டப்பட்டது. மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் காளியம்மன், அருகே நடராஜர் உள்ளனர். எதிரே நாகரும், சூலாயுதமும் உள்ளது. உள்வளாக இடது புறமாக விநாயகரும், இருபுறமும் துவாரக சக்தி தேவதைகள், வெளிப்பகுதியில் துர்க்கை, லட்சுமி, பிருத்திகாதேவி உள்ளன.

தல விருட்சமாக மிக பழமை வாய்ந்த அரச மரமும், கோயில் பின்புறம் பழமை வாய்ந்த தீர்த்த கிணறும், கோயிலின் இரண்டு புறமும் வாய்க்கால்களும் உள்ளன. தேனியிலிருந்து போடிக்கு வரும் மக்கள் அனைவரும் வணங்கி செல்லும் வகையில் உள்ளது. போடியில் பெரும்பாலான கோயில்களின் திருவிழாக்களின் போது இங்குள்ள தீர்த்த கிணற்றில் கரகம், தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். நடராஜர், காளியம்மனை வணங்கினால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்யம் கிட்டும். வேலைவாய்ப்பு, வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கும். தொழில் அபிவிருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை. அதற்காக தீர்த்த கிணற்றில் உப்பு, மிளகு போட்டு மனம் உருகி வேண்டிக் கொள்கின்றனர். தோஷ நிவர்த்தி நீங்க அரச மரத்தடியில் உள்ள நாகர், ராகு, கேதுவுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். தினந்தோறும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். வழக்கமான கால பூஜைகள், விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கோயில் குறித்த கூடுதல் விபரங்களை பூஜாரி பி. முருகனிடம் 86956 82523 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar