பதிவு செய்த நாள்
16
ஜூன்
2018
11:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ராட்சத இயந்திரம் மூலம், கிரிவலப்பாதையில் தார்ச்சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை, விரிவாக்கம் செய்யும் பணி, 68 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. சாலையோர டைல்ஸ் நடை பாதை, கழிவு நீர் கால்வாய், மரம் நடுதல் பணி, கண்காணிப்பு கேமரா பொருத்துதல், இலவச கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சேதமடைந்துள்ள தார்ச்சாலைகளை புதுப்பித்து, பக்தர்கள் நடப்பதற்கு ஏதுவாக தரமான சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக, தற்போது உள்ள தார்ச்சாலை, இரண்டு இன்ச் அளவிற்கு தோண்டப்பட்டு, சீரமைக்கப்பட்டு, அதன் மேல் தரமான தார்ச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதனால், பக்தர்கள் நடந்து செல்ல இதமாக இருப்பதோடு, கால்களில் சிறு சிறு கற்கள் குத்தி, பதம் பார்க்காமல் இருக்க முடியும். இதற்காக ராட்சத இயந்திரம் கொண்டு, தற்போது பழுதடைந்துள்ள தார்ச்சாலை தோண்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.