பதிவு செய்த நாள்
16
ஜூன்
2018
11:06
கடலுார்: கடலுார், சூரப்பநாயக்கன்சாவடியில் பெரியபாளையத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை 17ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, 1008 கலசங்கள், 11 குண்டங்கள் அமைக்கப்பட்டு பாடலீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் சிவமணி தலைமையில், யாக சாலை பூஜை நேற்று துவங்கியது. இன்று (16ம் தேதி) காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும், நாளை 17ம் தேதி காலை 7:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, 10:20 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடாகி, 10:50 மணிக்கு மூலவர் கோபுரங்கள் கும்பாபிஷேகம், 11:05 மணிக்கு மூலவர் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் சூரப்பநாயக்கன்சாவடி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.