குஜிலியம்பாறை, பாளையம் பேரூராட்சி சாணிபட்டியில் காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாமி சக்தி அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல்உள்ளிட்ட நிகழ்சிகள் நடந்தன. மேலும் கரகாட்டம், கலை நிகழ்ச்சிகள், நாடகம் என மூன்று நாட்களும் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.