பதிவு செய்த நாள்
18
ஜூன்
2018
01:06
கோவை;ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எளிய தமிழில் அனைவருக்கும் கீதை என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு, ராம்நகர் ராமர் கோவிலில் நேற்று நடந்தது. கடையநல்லுார் விஷ்வ வாரகரி சம்ஸ்தான் ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹராஜ் பேருரையாற்றினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, ஆன்மிக மழையில் திளைத்தனர். நிகழ்ச்சியில் ரகுநாத்தாஸ் மஹராஜ் ஆற்றிய உரையில், ஒருமனிதன், ஞானமயமாக வாழவும், அஞ்ஞானமாக வாழவும், உலகமே காரணம். நாம் தெய்வீக குணம் சம்பாதித்தால் தெய்வமாவோம். அரக்க குணம் சம்பாதித்தால், அரக்கனாக மாறுவோம். நம் குழந்தைகள் ஞானம் பெறுவது நம்மிடமிருந்துதான். எனவே, நாம் முதலில் ஞானம் பெற வேண்டும். ஞானத்தை பெற ,அனைவரையும் நேசிக்க வேண்டும், என்றார்.