பதிவு செய்த நாள்
18
ஜூன்
2018
01:06
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், பவானிசாகர் சாலையில், 300ஆண்டுகள் பழமையான சுப்ரமணியர் கோவில், சக்தி விநாயகர் கோவில் உள்ளது. பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர். விசஷே தினங்களில், வீதிகளை சுற்றி, சுவாமி அலங்கார ஊர்வலம் நடக்கிறது. சமீப காலமாக இந்த சாலையில், பிரியாணி மற்றும் இறைச்சி கடைகள் அதிகம் போடப்படுகின்றன. இதனால், கோவில்களுக்கு வரும் பக்தர்கள், முகம் சுளிக்கின்றனர். எஸ்.ஆர்.டி.,தியேட்டர் அருகே, சக்தி விநாயகர் கோவில் எதிரே, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகள் வைக்கப்படுகின்றன. உரிய நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.