பரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா கும்பாபிேஷக விழா நான்கு கால யாகபூஜையுடன், நேற்று முன்தினம் காலை10:35 மணிக்கு நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சத்யபாமா,ருக்மணியுடன் நந்தகோபாலகிருஷ்ணருக்கு திருக்கல்யாண உற்ஸவம்நடந்தது. திருக்கல்யாணத்தை சத்யநாராயணபட்டர் நடத்தி வைத்தார்.மகாதீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் மண்டல பூஜையையொட்டி, தினமும் காலை 9:00 மணிக்குமூலவருக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்து வருகிறது. விழாவில் யாதவர் வர்த்தக சங்கம், நந்த கோபால கிருஷ்ணா அறக்கட்டளைநிர்வாகிகள், சங்க பொதுக்குழு உப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.