பதிவு செய்த நாள்
19
ஜூன்
2018
11:06
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே, புதிதாக சீரமைத்த கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. சிறுமுகை அடுத்த முடுதுறை ஊராட்சி, பெரிய குமா-ரபாளையம் பிரிவில் மிகவும் பழமையான கரிய காளியம்மன் கோவில் உள்ளது. ஆகம சாஸ்திரப்படி, புதிதாக கோவில் கருவறை, அர்த்த மண்டபம் , மகா மண்டபம் ,மூன்று நிலை கோபுரம், குறிஞ்சி மண்டபம் போன்ற திருப்பணிகள் செ ய்யப்பட்டன. புதிதாக கணபதி, கருப்பண்ணசாமி சன்ன திகள் கட்டப்பட்டன. கும்பாபிஷேகவிழா, கடந்த, 13ல் கணபதி ஹோமத் துடன் துவங்கியது. நான்கு கால யாக பூஜைகளுக்கு பின், தீர்த்தக்குடங்களை கோவிலை சுற்றி எடுத்து வந்து, கோபுர விமானத்துக்கும், மூலவர் சிலைகளுக்கும் புனித தீர்த்தத்தை ஊற்றினர். கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் தலைமையில், ஓதிமலை ஆண்டவர் கோவில் சண்முகசுப்ரமணிய குருக்கள், கணபதி ராஜ் சிவாச்சாரியார், கிரிவாச சிவம் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின், சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அம்மன் திருப்பணிக்குழு மற்றும் ஏழு கிராம மக்கள் செய்திருந்தனர்.