கடலுார்: கடலுார், வில்வநகர் பெருந்தேவி தாயார் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 22ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 23ம் தேதி ஏகதின லட்சார்ச்சனையும் நடக்கிறது. உற்சவத்தையொட்டி, வரும் 22ம் தேதி காலை 7:00 மணிக்கு பெருமாள் தாயார் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு வரிசை தட்டு ஊர்வலமும், 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 23ம் தேதி காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை 10 காலங்களாக பெரும்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாளுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.