கொடி மரம் மற்றும் நந்தி பகவானுக்கு எண்ணெய், பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தன. இரவு 7:15 மணிக்கு சுவாமி சப்பரத்தில் காட்சியளித்தார்.தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் விழாவில் சிம்மம், கற்பகதரு, பூதம், அன்னம், குதிரை வாகனங்களில் சுவாமி, அம்மன் உலா நடக்கும். முக்கிய விழாவான தேரோட்டம் ஜூன் 27 ல் கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது.-விழாக்காலங்களில் மாலை திருவாசகம் முற்றோதல், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் பொறுப்பு நாராயணி, தக்கார் நாகராஜன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.