பதிவு செய்த நாள்
20
ஜூன்
2018
11:06
ஈரோடு: கபாலீஸ்வரர் கோவில் பசுமாடு, காளை கன்று ஈன்றது. ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஐந்து கலப்பின பசு மாடுகள் இருந்தன. இவற்றைக் கொண்டே, கோவில் பூஜைகளுக்கான, பால் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இந்நிலையில் பால் சுரக்கும் திறன் குறைந்ததால், பழநி கோசாலைக்கு, சில நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டன. அதன் பின், கோவில் கோபூஜை, அபி?ஷக பால் தேவைக்கு, காங்கேயம் மயிலை இன, நாட்டு பசு மாடு வாங்கப்பட்டது. கோவில் கோசாலையில் பராமரிக்கப்படுகிறது. இதில் ஒரு பசு, நேற்று முன்தினம் இரவு, காளைக் கன்று ஈன்றது. கோவிலில், பிச்சாண்டார் (மாணிக்கவாசகர்) உற்சவம், ஆனி திருமஞ்சனம், திருவிழா நடக்கிறது. இந்நிலையில் கபாலீஸ்வரர் கோவில் பசுமாடு, காளைக்கன்று ஈன்றுள்ளது. கோசாலையில் துள்ளிக் குதித்து ஓடும் கன்றை, பக்தர்கள், கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.