அனுப்பர்பாளையம் : திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க மூர்த்தி கோவில் கம்பாபிஷேகம் நாளை நடக்கிறது. திருப்பூரை அடுத்த 15 வேலம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமலிங்க மூர்த்தி, ஸ்ரீ பர்வத வர்த்தினி உடனமர் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் நுாதன கோவில், மஹா கும்பாபிஷேக விழா நாளை 22ம் தேதி காலை 10:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள நடக்கிறது. விழாவையொட்டி, இன்று தேதி காலை மூலமூர்திகளுக்கு பிம்பத்தி கண் கண்திறத்தல், கோபுர கலசங்கள் பிரதிஷ்டை எந்தர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாஹ பூஜைகள் நடக்கிறது.நாளை, காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து, கலசங்கள் எடுத்து செல்லுதல், 10:00 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் ஆகியன நடக்கிறது. கும்பாபிஷேக பூஜைகள், அவிாநசிலிங்கேஸ்வரர் கோவிலை சேர்ந்த ஆரூர சுப்ரமண்ய சிவாச்சார்யார் தலைமையில் நடக்கிறது.